|    isxy,
English

Mrpup AOI Gw;W Neha; epiyak;

உலகின் மிகச் சிறந்த புற்றுநோய் பராமரிப்பு முறைகளை இலங்கைக்கு எடுத்து வருதல்

புற்றுநோய் பராமரிப்பை பொறுத்தவரையில், நாங்கள் தேர்ந்தெடுக்கும் வழியே இறுதியில் சென்றடையும் இடத்தை தீர்மானிக்கின்றது. ஆசிரி AOI புற்றுநோய் நிலையத்தில் நாங்கள் முழுமையான புற்றுநோய் பராமரிப்பினை எமது நோயாளர்களின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றோம். புற்றுநோய் சிகிச்சை என்பது பன்முக வகைகளைச் சேர்ந்த சிகிச்சைகள் தொடக்கம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் தீவிரமான உணர்வு ரீதியான ஆதரவு என்பன வரையில் மிகவும் சிக்கலான ஒரு சிகிச்சை முறையாக இருந்து வருகின்றது என்ற விடயத்தை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். எமது ஒவ்வொரு நோயாளியினதும் குடும்பத்தினருக்கு துணை நிற்பதற்கு நாங்கள் எம்மை அர்ப்பணித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு படிமுறையின் போதும், ஒவ்வொரு விபரத்தை கவனத்தில் எடுக்கும் போதும், தனிப்பட்ட இயல்பிலான மற்றும் கருணையுடன் கூடிய பொருத்தமான புற்றுநோய் சிகிச்சையை வழங்கும் விடயத்திலும் நாங்கள் அவர்களை எமது பங்காளர்களாக கருதி செயற்பட்டு வருகின்றோம். ஆசிரி AOI நிலையத்தின் மிகத் துல்லியமான சிகிச்சை முறை, ஐக்கிய அமெரிக்காவில் (தீங்கிழைக்கும் உடல் கட்டிகள் / கழலைகள் ஏற்படுத்தும்) புற்று நோய்களுக்கு சிகிச்சை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிலையத்துடன் கூட்டாக இணைந்து வழங்கப்பட்டு வருகின்றது. ஆசிரி AOI நிலையத்தில் நாங்கள் ஒவ்வொரு நோயாளருக்கும் அவருடைய தேவைக்குப் பொருந்தக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த பராமரிப்பு மாதிரி ஒன்றை வழங்கி வருகின்றோம்.

எமது அனைத்துமடங்கிய புற்றுநோய் பராமரிப்பு நிலையம் மருத்துவ, கதிர்வீச்சு மற்றும் அறுவை மருத்துவத் துறைகளில் உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பினை வழங்கி வருகின்றது. அதி நவீன ரேடியோக்கதிர் நோய் நிர்ணய PET சேவைகள் மற்றும் நோய் நிர்ணயத்துறை சேவைகள் என்பவற்றுடன் இணைந்த விதத்தில் இந்தப் பராமரிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. ஆகவே, அது நோய் நிர்ணயமாக இருந்து வந்தாலும் சரி அல்லது சிகிச்சையாக இருந்து வந்தாலும் சரி, புற்றுநோய் பராமரிப்பில் எதிர்கொள்ள நேரிடும் எந்த ஒரு சவாலையும் கையாள்வதற்கு தேவையான நிபுணத்துவத்தை நாங்கள் கொண்டுள்ளோம். பயிற்றப்பட்ட மற்றும் காருண்யத்துடன் கூடிய தாதியர் பணியாளர்களின் பக்கபலத்துடன் பன்முகத் துறைகளில் உயர் தகைமைகளை பெற்றுக்கொண்டிருக்கும் சிகிச்சை வல்லுனர்களுடன் இணைந்த விதத்தில் இலங்கையில் புற்றுநோய் பராமரிப்பில் அதியுயர் சேவையை வழங்கும் விடயத்தில் நாங்கள் முன்னணி ஸ்தானத்தில் இருந்து வருகின்றோம்.

சர்வதேச தரம் வாய்ந்த புற்றுநோய் பராமரிப்பு

பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரையில் புற்றுநோய் என்பது தனியொரு நோயாக நோக்கப்படுகின்றது. எனினும், 200 வகைகளுக்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான புற்றுநோய்கள் இருந்து வருவதுடன், அவை ஒவ்வொன்றும் ஆரம்ப கட்டத்தில் அல்லது முற்றிய கட்டத்தில் இனங்காணப்பட முடியும். வினைத்திறன் மிக்க புற்றுநோய் பராமரிப்புக்கு கூட்டாக முன்னெக்கப்படும் ஒரு பல்துறை சார் அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்த அணுகுமுறையில் புற்றுநோய் மருத்துவர், கதிரியக்கச் சிகிச்சை மருத்துவர் மற்றும் அறுவை மருத்துவர்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து ஒவ்வொரு நோயாளி தொடர்பாகவும் மிகச் சிறந்த முகாமைத்துவ முறை எது என்பதனை தீர்மானிக்கின்றார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புற்றுநோயாளர்களுக்கு இந்த அனைத்து மூன்று துறைகளையும் உள்ளடக்கிய விதத்திலான சிகிச்சை முறை ஒன்று தேவைப்படுகின்றது. மேலும், அந்தச் சிகிச்சை, தரநியமத்துடன் கூடிய சிகிச்சை முறைகள் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதும் முக்கியமானதாகும். இந்தச் சிகிச்சை முறைகள், தென்னாசியப் பிராந்தியத்தையும் உள்ளடக்கிய விதத்தில் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிகிச்சைகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டிருக்கும் சான்றுகளை பயன்படுத்தி, அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஆசிரி AOI புற்றுநோய் நிலையத்தைச் சேர்ந்த நாங்கள் புதிய தலைமுறை கதிர்வீச்சு சிகிச்சை முறை ஒன்றை (Linear Accelerator) துவக்கி வைத்திருப்பதுடன், அது இலங்கையில் வழங்கப்படும் மிக முன்னேற்றகரமான சிகிச்சையாக இருந்து வருவதுடன், தென்னாசியாவில் வழங்கப்பட்டு வரும் ஒரு சில தலைசிறந்த சிகிச்சைகளில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது. எமது உடல் கட்டி மருத்துவச் சபை பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிலையத்தின் முன்னணி புற்றுநோய் வல்லுனர்களை கொண்டுள்ளது. பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழத்தின் மருத்துவ நிலையமே இந்த நிபுணத்துவத்தை இலங்கையில் வழங்கும் ஒரேயொரு புற்றுநோய் நிலையமாக இருந்து வருகின்றது.

புற்றுநோய் மருத்துவர்கள் (Oncologists) மற்றும் அறுவை மருத்துவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய எமது அணி அனுபவம் மற்றும் தகைமைகள் என்பவற்றின் அடிப்படையில் களத்தில் முன்னணியில் இருந்து வருகின்றது. மிக முக்கியமாக எமது தாதியர் மற்றும் துணை மருத்துவ தொழில்நுட்பவியாளர்கள் ஆகியோர் ஒவ்வொரு புற்றுநோயாளிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்குவதற்கென தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள்.

அமெரிக்க புற்றுநோயியல் நிறுவனம் (American Oncology Institute - AOI)

அமெரிக்க புற்றுநோயியல் நிறுவனம் (AOI) தென்னாசியாவில் புற்றுநோய் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனமாகும். அது இந்தியா மற்றும் தென்னாசியா ஆகிய பிராந்தியங்கள் நெடுகிலும் உள்ள பல்வேறு நகரங்களில் புற்றுநோய் மருத்துவமனைகளின் ஒரு சங்கிலித் தொடரை இயக்கி வருகின்றது. பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிலையத்தின் (UPMC) பல தசாப்த கால அனுபவத்துடன் கூடிய முன்னணி புற்றுநோய் வல்லுனர்களின் குழு ஒன்றினால் AOI நிறுவனம் 2006ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. புற்றுநோய் தொடர்பான ஐக்கிய அமெரிக்க சிகிச்சை முறைகளை ஆசிய உபகண்டத்திற்கு எடுத்துவரும் நோக்குடன் இது நிறுவப்பட்டது. பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தின் புற்றுநோய் நிலையங்கள் 1990 களின் பிற்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டன. இப்பொழுது அவை நன்கு ஒழுங்கமைந்த ஒரு கட்டமைப்பில் இருந்து வருவதுடன், 40க்கும் மேற்பட்ட பிராந்திய அமைவிடங்களில் செயற்பட்டு வருகின்றன. அந்த நிலையங்களில் 200 க்கு மேற்பட்ட புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் வருடாந்தம் சுமார் 75,000 புற்றுநோயாளர்களுக்கு பராமரிப்பை வழங்கி வருகின்றார்கள். இது 25,000 புதிய நோயாளர்களையும் உள்ளடக்குகின்றது. மேலும் வாசிக்கவும் மேலும் வாசிக்க

புற்றுநோய் பராமரிப்பு தொடர்பாக தென்னாசியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் நிலவி வரும் தரநியமங்களுக்களின் இடைவெளியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் AOI நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. துல்லியமான புற்றுநோய் பராமரிப்பை வழங்கி வரும் அதன் தாய் நிறுவனத்தின் தலைசிறந்த திறன்களை ஆசியாவுக்கு எடுத்து வரும் நோக்கத்துடன் இது முன்னெடுக்கப்பட்டது.

AOI அதி சிறந்த சிகிச்சை, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம், அதே போல சிசிச்சை திட்டமிடல் மற்றும் நிறைவேற்றுதல் என்பவற்றுக்கான சர்வதேச வழிமுறைகள் மற்றும் முறைமைகள் என்பவற்றுடன் இணைந்த விதத்தில் வலுவூட்டப்பட்டு, அனைத்துமடங்கிய புற்றுநோய் முகாமைத்துவத்தை வழங்குகின்றது. இந்தியா மற்றும் தென்னாசியா ஆகிய பிராந்தியங்கள் நெடுகிலும் இதற்கு முன்னர் ஒரு போதும் இருந்து வராத விதத்திலான புற்றுநோய் பராமரிப்பின் அதி உயர் தரத்தை அது வழங்குகின்றது. தற்பொழுது AOI தென்னாசியாவின் ஒன்பது பெரு நகரங்களில் பத்து புற்றுநோய் மருத்துவ நிலையங்களுக்கு ஊடாக செயற்பட்டு வருகின்றது. 20 புற்றுநோய் மருத்துவமனைகளை எட்டுவது அதன் திட்டமிட்ட விரிவாக்கல் செயற்பாடாக உள்ளது. தென்னாசியாவில் புற்றுநோய் பரவல் அதிகரித்ததுடன் இணைந்த விதத்தில் AOI நிறுவனத்தின் மிகத் துல்லியமான புற்றுநோய் பராமரிப்பு இப்பிராந்தியத்தில் புற்றுநோய் பராமரிப்பின் தரத்தை உயர் மட்டங்களுக்கு எடுத்து வந்துள்ளது. இந்தப் புற்றுநோய் பராமரிப்புச் செயற்பாடு UPMC நிபுணர்களினால் நெறிப்படுத்தப்படும் உலகத் தரம் வாய்ந்த புற்றுநோயியல் சபையின் வலிமையை பெற்றுக்கொண்டுள்ளது.

எங்களுடைய பணி மிக எளிமையானதாகும். நம்பிக்கை, வெளிப்படைத் தன்மை மற்றும் தொழில்நுட்பம் என்பன தொடர்பான அதியுயர் அமெரிக்க தரநியமங்களை நிறைவேற்றி வைக்கும், சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் பராமரிப்பை வழங்கி வரும் அதே வேளையில், நோயாளர்களின் தேவைகளுக்கு முதலிடமளிப்பதே அப்பணியாகும்.

 

ஆசிரி AOI நிலையத்தை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

ஆசிரி AOI நிலையத்தை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

ஆசிரி நிலையத்தில் வழங்கப்படும் புற்றுநோய் சிகிச்சை பெருமளவுக்கு அனுபவம் மிக்க பல்துறை சார் திறன்களை கொண்ட புற்றுநோய் நிபுணர்களின் ஒரு குழுமத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. புற்று நோய்க்கான மருந்து மூலமான சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை மருத்துவச் சிகிச்சை போன்ற துறைகளில் அவர்கள் வல்லுனர்களாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நன்கு பயிற்றப்பட்ட தாதிகள், மருத்துவ பௌதீகவியாளர்கள் மற்றும் ஏனைய துணை ஆளணியினர் ஆகியோரின் பக்கபலம் கிடைக்கின்றது.

அதி சிறந்த தொழில்நுட்பம்

AOI புற்றுநோய் நிலையம் PET ஸ்கான் இயந்திரமொன்றைக் கொண்டிருக்கும் இலங்கையின் ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை நிலையமாக இருந்து வருகின்றது. மிகவும் வலுவான நான்கு பரிமாண (4D) படங்களை எடுக்கும் தொழில்நுட்பம் உடல் கட்டிகளை மிகவும் நுணுக்கமாக பரிசீலனை செய்வதற்கு மருத்துவர்களுக்கு உதவுவதுடன், துல்லியமாக இலக்கு வைக்கப்பட்ட கதிரியக்கச் சிகிச்சையை திட்டமிடுவதற்கும், பெற்றுக் கொடுப்பதற்குமான இயலுமையை அவர்களுக்கு வழங்குகின்றது.

மிகத் துல்லியமான தொழில்நுட்பம்

True Beam தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதிரியக்க சிகிச்சை இயந்திரங்களை வழங்கும் இலங்கையில் இருக்கும் ஒரேயொரு நிலையமாக AOI இருந்து வருகின்றது. அது சிகிச்சையின் துல்லியத் தன்மையை உறுதிப்படுத்துவதுடன், நேரடியாக உரிய கட்டியை இலக்காகக் கொண்டு அந்தச் சிகிச்சை வழங்கப்படுவதனையும் உறுதிப்படுத்துகின்றது. மேலும், அதைச் சூழவுள்ள ஆரோக்கியமான இழையங்களை (Tissues) அது பாதுகாத்து வருகின்றது.

சிகிச்சை வழிமுறைகள் மற்றும் முறைமைகள்

துல்லியமான பெறுபேறுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கென ஆசிரி AOI நிலையம் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட மருந்து முறையை பின்பற்றுகின்றது. ஆசிரி AOI நிலையத்தைச் சேர்ந்த நாங்கள் ஒவ்வொரு சிகிச்சையும் சர்வதேச சிகிச்சை ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் திட்மிடப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்கின்றோம். மேலும், அது தொழில்நுட்ப ஆற்றலைப் பயன்படுத்தி தீர்மானங்களை மேற்கொள்ளும் கருவிகளுக்கு ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச உடல் கட்டி மருத்துவ சபை (International Tumour Board)

வாராந்தம் சர்வதேச உடல் கட்டி மருத்துவ சபைக் கூட்டமொன்று நடத்தப்பட்டு வரும் அநேகமாக தென்னாசியாவின் ஒரே ஒரு புற்று நோய் மருத்துவ நிலையங்களின் சங்கிலித் தொடராக AOI மட்டுமே இருந்து வருகின்றது. இந்த வாராந்த கூட்டங்களின் போது பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தைச் (UPMC) சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர்கள் திட்டவட்டமான நோயாளர்களுக்கான சிகிச்சையை திட்டமிடுவதற்கென உள்நாட்டு சிசிச்சை நிபுணர்களுடன் இணைந்து நோயாளர்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றார்கள். ஆசிரி AOI நிலையம் இலங்கையில் அதன் நோயாளர்களுக்கு இந்த சர்வதேச உடல் கட்டி நோயியல் சபையின் சேவைகளை வழங்கவிருக்கின்றது.

மத்திய மயப்படுத்தப்பட்ட சிகிச்சை திட்டமிடல்

எமது கதிர்வீச்சு சிகிச்சைத் திணைக்களம் மத்தியமயப்படுத்தப்பட்ட சிகிச்சை நிலையமொன்றை கொண்டுள்ளது. ஒவ்வொரு சிகிச்சைத் திட்டமும் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து செயற்பட்டு வரும் ஒரு மருத்துவ அணியினரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வை என்பவற்றின் கீழ், நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் மருத்துவர்களின் குழு ஒன்றினால் தயாரிக்கப்படுகின்றது. ஏனைய சாதாரண இழையங்களை விட்டு வைக்கும் அதே வேளையில், உடல் கட்டியின் அனைத்து பாகங்களுக்கும் உச்சமட்டத்தில் கதிர்வீச்சு அனுப்பப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு துல்லியமான ஒரு சிகிச்சைத் திட்டம் அத்தியாவசியமாக இருந்து வருகின்றது.

புற்றுநோய் என்றால் என்ன?

அசாதாரண உயிரணுக்கள் கட்டுப்பாடில்லாமல் பிரிந்து செல்வதனையும், ஏனைய இழையங்களுக்குள் ஆக்கிரமிப்பு செய்வதனையும் உள்ளடக்கிய நோய்களை குறிக்கும் பொருட்டு புற்று நோய் என்ற பதம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது: புற்று நோய் உயிரணுக்கள் இரத்தம் மற்றும் நிணநீர் தொகுதிக்கு ஊடாக உடல் முழுவதும் பரவ முடியும். புற்று நோய் உயிரணுக்கள் அவை தோற்றம் பெறும் இடத்திலிருந்து நகர்ந்து சென்று, இரத்த நாளங்களுக்கு ஊடாகவும், நிணநீர் அமைப்புக்களுக்கு ஊடாகவும் உடலின் ஏனைய பாகங்களை ஆக்கிரமிக்கும் பொழுது இடம்பெறும் செயன்முறை metastasis செயன்முறை என அழைக்கப்படுகின்றது.

புற்று நோய் ஒரு தொற்று நோயாக இருந்து வருவதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பரம்பரை மரபணுக்கூறுகள் மற்றும் சுற்றாடல் காரணிகள் என்பவற்றின் ஒரு கலவையின் காரணமாக அது ஏற்படுகின்றது. 200 வகைகளுக்கு மேற்பட்ட புற்று நோய்கள் இருந்து வருகின்றன. பெரும்பாலான புற்றுநோய்களுக்கு அவை தோன்றும் உடல் உறுப்பின் அல்லது உயிரணுவின் அடிப்படையில் பெயர் குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக, கர்ப்பப்பையில் தோன்றும் புற்றுநோய் கர்ப்பப்பை புற்று நோய் என அழைக்கப்படுவதுடன், தோலின் அடிப்பாகங்களில் தோன்று புற்றுநோய் தோல் புற்று நோய் என அழைக்கப்படுகின்றது.

புற்றுநோயின் தோற்றம்

அனைத்து புற்றுக்களும் உயிரின் அடிப்படை அலகுகளான உடலின் உயிரணுக்களிலிருந்தே தோற்றம் பெறுகின்றன. மனித உடல் பல்லாயிரம் கோடி உயிரணுக்களை கொண்டதாக இருந்து வருகின்றது. அந்த உயிரணுக்கள் வளர்ச்சி அடைவதன் மூலமும், பிரிவதன் மூலமும், உடலுக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் புதிய உயிரணுக்களை உற்பத்தி செய்வதன் மூலமும் மனித உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. சாதாரணமாக உயிரணுக்கள் பழமை அடையும் பொழுது அல்லது சேதமடையும் பொழுது அவை இறந்து விடுகின்றன் மற்றும்; அவற்றுக்குப் பதிலாக புதிய உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எவ்வாறிருப்பினும், உயிரணுக்கள் கட்டுப்பாடற்ற விதத்தில் ஒன்றிலிருந்தொன்று பிரிந்து, மீள் உற்பத்தியாகும் பொழுது இந்தச் செயன்முறை சீர்குலைவடைகின்றது. உடலுக்கு புதிய உயிரணுக்கள் தேவையில்லாத சந்தர்ப்பங்களிலும் இந்தச் செயன்முறை இடம்பெறுகின்றது. அநாவசியமான இந்த வளர்ச்சி DNA என அழைக்கப்படும் சிதைக்கப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட மரபணு தொகுப்புக்களின் விளைவாக தோன்ற முடியும். இத்தகைய உயிரணுக்களின் வளர்ச்சி இடம்பெறும் பொழுது அதன் விளைவாக உடலில்; இருக்கும் ஒட்டுமொத்த உயிரணுக்களின் எண்ணிக்கையில் தேவையற்ற விதத்திலான ஓர் அதிகரிப்பு ஏற்படுகின்றது. புதிய உயிரணுக்களில் இவ்விதம் ஏற்படும் அதிகரிப்பு உடல் கட்டி (அல்லது கழலை) (Tumor) என அழைக்கப்படும் உயிரணுக்களின் ஒரு பாரிய திரளை உருவாக்க முடியும். எவ்வாறிருப்பினும், அனைத்து உடல் கட்டிகளும் புற்று நோய்களாக இருந்து வருவதில்லை.

கட்டிகளை (அல்லது கழலைகளை) இரண்டு வகைகளாக பிரிக்க முடியும்:

தீங்கற்ற கட்டிகள் (Benign Tumors):

இத்தகைய கட்டிகள் புற்று நோய் கட்டிகளாக இருந்து வருவதில்லை. அவை அநேகமாக உயிராபத்தை எடுத்து வருவதுமில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அத்தகைய கட்டிகளை அகற்றிவிட முடியும். அவ்விதம் அகற்றப்பட்ட பின்னர் கட்டிகள் மீண்டும் பொதுவாக வளர்வதில்லை. அது தவிர, இத்தகைய உயிரணுக்கள் உடலின் ஏனைய பாகங்களுக்கு பரவுவதில்லை.

தீங்கான கட்டிகள் (Malignant Tumors):

இத்தகைய கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக இருந்து வருகின்றன. தீங்கு விளைவிக்கும் கட்டிகள் அருகிலிருக்கும் ஆரோக்கியமான இழையங்களை தாக்க முடியும். இத்தகைய உயிரணுக்கள் உடலின் ஏனைய பாகங்களுக்கு பரவக் கூடிய ஆபத்தையும் கொண்டுள்ளன.

ஒரு சில புற்றுக்கள் கட்டிகளை உருவாக்குவதில்லை. எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்தம் என்பவற்றில் ஏற்படக்கூடிய லியூகேமியா வகையைச் சேர்ந்த புற்றுநோய் அத்தகைய புற்றுநோய்க்கான பொதுவான ஓர் உதாரணமாகும்.

புற்று நோய் வகைகளை பரவலான வகைப்படுத்தல்களின் கீழ் பிரிக்க முடியும்.

புற்று நோயின் பிரதான வகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: :

Carcinoma

உள் உறுப்புக்களை ஒட்டியிருக்கும் அல்லது சூழவிருக்கும் உடல் தோலில் அல்லது இழையங்களில் தோன்றும் புற்றுக்கள்.

Sarcoma

எலும்பு, குருத்தெலும்பு, கொழுப்பு, தசை, இரத்தக் குழாய்கள் அல்லது ஏனைய இணைப்பு அல்லது துணை இழையங்கள் என்பவற்றில் தோன்றும் புற்றுக்கள்:

லியுகேமியா (Leukemia)

எழும்பு மஜ்ஜை போன்ற இரத்தத்தை உருவாக்கும் இழையத்தில் தோன்றும் புற்றுநோய். இது பெரும் எண்ணிக்கையிலான அசாதாரணமான இரத்த உயிரணுக்களை உருவாக்குவதுடன், அவை இரத்ததிற்குள் பிரவேசிக்கின்றன.

Lymphoma and Myeloma

நோய் எதிர்ப்புச் சக்தி தொகுதியின் உயிரணுக்களில் தோன்றும் புற்றுநோய்கள்.

மத்திய நரம்பு மண்டல புற்று நோய்கள்

மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தின் இழையங்களில் தோன்றும் புற்றுநோய்கள்.

இலங்கையில் புற்றுநோய்கள்

இலங்கையில் பெருமளவுக்கு காணப்படும் புற்றுநோய்கள் பின்வருவனவாகும்:

மார்பகப் புற்றுநோய் (Breast cancer)

மார்பகத்தின் இழையங்களில் தோன்றும் புற்றுநோய்.

உதடு, வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை குரல்வளை புற்றுநோய் (Lip, Oral Cavity and Pharynx cancer)

வாயில் அல்லது தொண்டையில் தோன்றும் புற்றுநோய்.

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் (Colon and Rectum Cancer)

பெருங்குடல் மற்றும் மலக்குடல் என்பவற்றில் தோன்றும் புற்றுநோய்.

தசைநார் புற்றுநோய் (Esophageal cancer)

உணவு மற்றும் நீர் போன்ற பொருட்களை வாயிலிருந்து வயிற்றுக்கு எடுத்துச் செல்லும் தசைக் குழாயில் தோன்றும் புற்றுநோய்.

தைரொயிட் புற்றுநோய் (Thyroid cancer)

தைரொயிட் நாளங்களில் தோன்றும் புற்றுநோய். இது இலங்கையில் பெண்களுக்கு மத்தியில் நிலவி வரும் மூன்றாவது மிகப் பெரிய புற்றுநோயாக இருந்து வருகின்றது.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய் (Cervical cancer)

பெண்களின் கருப்பையின் கீழ் பகுதியில் தோன்றும் புற்றுநோய்.

பொரெஸ்ரேட் நாள புற்றுநோய் (Prostate Gland cancer)

ஆண் இனப்பெருக்கத் தொகுதியில் தோன்றும் பொரெஸ்ரேட் புற்றுநோய்.

சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் (Trachea, bronchus and Lung cancer)

சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல் இழையங்களில் தோன்றும் புற்றுநோய்.

கர்ப்பப்பை புற்றுநோய் (Ovarian cancer)

சினை முட்டைகளை உற்பத்தி செய்யும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புக்களில் உருவாகும் புற்றுநோய்.

Cancer Types
நோயாளர் கல்வி தொடர் வரிசை
Ovarian Cancer
மேலும் வாசிக்க
Prostate Cancer
மேலும் வாசிக்க
Uterine Cancer
மேலும் வாசிக்க
Breast Cancer
மேலும் வாசிக்க
Lung Cancer
மேலும் வாசிக்க
Cervical Cancer
மேலும் வாசிக்க
Oral Cancer
மேலும் வாசிக்க
Dietary Habits and Cancer
மேலும் வாசிக்க
புற்றுநோயை நோய் நிர்ணயம் செய்தல்

Gamma camera

ஆரம்ப கட்டங்களில் புற்றுநோயை நோய் நிர்ணயம் செய்தல் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பினை வழங்குகின்றது. இதனை கருத்தில் கொண்டு உங்களுக்கு எந்த வகையைச் சேர்ந்த புற்று நோய் பரிசோதனை பொருத்தமானதாக இருந்து வருகின்றது என்பது குறித்து உங்கள் மருத்துவருடன் உரையாடுங்கள்.

ஒரு சில புற்றுநோய்களை பொறுத்தவரையில் பரிசோதனை மூலம் அவற்றை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதன் மூலம் பல உயிர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற விடயத்தை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஏனைய புற்றுநோய்களை பொறுத்தவரையில், அதிகரித்தளவிலான ஆபத்தைக் கொண்டிருக்கும் ஆட்கள் தொடர்பாக மட்டும் பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

ஆசிரி AOI நிலையம் பின்வருவனவற்றுக்கு ஊடாக புற்றுநோய் சிகிச்சை பராமரிப்புக்கென துல்லியமான நோய் நிர்ணயத்தை மேற்கொள்கின்றது:

  • PET ஸ்கான் சோதன
  • Gamma camera
  • CT/MRI/USS
  • மேமோகிராபி (மார்பகப்) பரிசோதனை
  • கட்டிகளின் அடையாளக் குறிகள்
  • மரபணு, Histopathology, உயிர் இரசாயனவியல் ஆய்வு கூடங்கள்

கதிர்வீச்சு சிகிச்சைக்கென அத்தகைய நோய் நிர்ணயத்தை வழங்கும் இலங்கையில் செயல்படும் ஒரேயொரு நிலையமாக AOI நிலையம் இருந்து வருகின்றது.

ஆசிரி AOI நிலையத்தில் வழங்கப்படும் புற்று நோயியல் (Oncology) சேவைகள்

புற்றுநோய் பராமரிப்பு வலுவுடன் கூடிய தொழில்நுட்பம்

அது வெறுமனே நிபுணத்துவம், ஒழுங்குவிதிகள் மற்றும் திறன்கள் சார்ந்த ஒரு விடயம் மட்டுமல்ல் புற்றுநோய் பராமரிப்பு அதி நவீன தொழில்நுட்பத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகவும் இருந்து வருகின்றது. ஆசிரி AOI நிலையம் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் இணைந்த விதத்திலும், சிகிச்சை திட்டமிடலுக்கான நவீன தகவல் தொழில்நுட்ப வலையமைப்புடன் இணைந்த விதத்திலும் சிகிச்சை செயன்முறைகளின் அனைத்து அம்சங்களுக்கும் ஆதரவளித்து வருகின்றது.

நிபுணத்துவ தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்த விதத்தில் உலகின் மிகப் பிந்திய மருத்துவ உபகரணங்களைக் கொண்டிருக்கும் ஆசிரி AOI நிலையம் அதி சிறந்த புற்றுநோய் பராமரிப்பு சேவையில் முன்னணியில் இருந்து வருகின்றது.

நோய் நிர்ணயம்

ஆசிரி AOI நிலையம் கெடுதி விளைவிக்கக்கூடிய நோய்க்கூறுகளை கண்டறிந்து கொள்வதற்கென PET மற்றும் CT வரைபட முறையை பயன்படுத்தும் இலங்கையின் ஒரேயொரு நிலையமாக இருந்து வருகின்றது. மேலும், அது சிகிச்சைக்கான எதிர்வினையையும் கண்காணிக்கின்றது. Gamma camera தவிர CT/MRI/USS போன்ற அடிப்படை நோய் நிர்ணய உபகரணங்களையும் அது கொண்டுள்ளது.

சிகிச்சை

நாங்கள் முழுமையான அனைத்துமடங்கிய சிகிச்சைத் தெரிவுகளை வழங்குகின்றோம்:
  • புற்றுநோய் அறுவை மருத்துவம்
  • புற்றுநோய் கதிர் வீச்சு சிகிச்சை
  • புற்றுநோய் மருத்துவம் (மருந்து மூலம் சிகிச்சை)

வலி நிவாரண நோயாளர் பராமரிப்பு

பன்முக திறன்களைக் கொண்ட ஓர் அணியினருக்கு ஊடாகவும், பன்முக சிகிச்சை முறைகளுக்கு ஊடாகவும் ஒவ்வொரு நோயாளி தொடர்பாகவும் வலி நிவாரண பராமரிப்பு.
Diagnostics

600 PET/CT கண்டுபிடிப்பு

ஆசிரி AOI நிலையம் நான்கு பரிமாண (‘4D’) PET/CT உபகரணத் தொகுதியை கொண்டுள்ளது. அது இரு வரைபடத் தயாரிப்பு தொழில்நுட்பங்களின் வலிமையை ஒன்றாக இணைப்பதுடன், உடல் கட்டிகளின் அளவில் காணப்படும் வேறுபாடுகள், வடிவம், அமைவிடம், நோயாளர்கள் அசையும் பொழுது மற்றும் மூச்செடுக்கும் பொழுது அவற்றின் வடிவம் மற்றும் அமைவிடம் போன்ற விடயங்களை மருத்துவர்கள் துல்லியமாக கண்டறிந்து கொள்வதற்கு உதவுகின்றது. அதனுடன் இணைந்த விதத்தில் ஒரு நோயாளியின் உடல் கட்டி மற்றும் அதனை சூழவுள்ள உடல் கட்டமைப்புக்கள் என்பன தொடர்பான முழுமையான, மிகவும் துல்லியமான படங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு மருத்துவர்களுக்கு கிடைக்கின்றது. கதிர்வீச்சு சிகிச்சை உடல் கட்டியை சூழவுள்ள ஆரோக்கியமான திசுக்களை தாக்காமல், உடல் கட்டியின் மீது மட்டுமே தாக்கத்தை எடுத்து வருவதனை உறுதிப்படுத்திக் கொள்ளவதற்கு அவர்கள் இந்தத் தகவல்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆசிரி AOI நிலையம் இந்த வலிமையான வரைபட உருவாக்க வசதியைக் கொண்டிருக்கும் இலங்கையின் ஒரேயொரு நிறுவனமாக இருந்து வருகின்றது.

பொலிஸ்ட்ரென் வாயு வெளியேற்ற (PET) ஸ்கான் கருவி உங்கள் உடலின் (வலுப் பயன்பாட்டை) இரசாயன செயற்பாட்டைக் காட்டும் ஓர் உடல் ஒரு வரைபடப் பரிசோதனை ஆகும். ஒரு PET ஸ்கான் சோதனை உங்களுடைய மூளை எவ்வாறு செயற்பட்டு வருகின்றது என்பது குறித்த தகவல்களை உங்கள் மருத்துவர்களுக்கு வழங்க முடியும். அது புற்றுநோய், வலிப்புக்கள் அல்லது மூளை செயலிழப்பு நோய் (Alsheimer) என்பவற்றை கண்டறிந்து கொள்வதற்கு பயன்படுத்தப்பட முடியும். நினைவு ஒழுங்கீனங்களைக் கொண்டிருக்கும் நோயாளர்களை பொறுத்தவரையில் அறுவை மருத்துவத்தின் மூலம் நீக்கப்படக்கூடிய எவையேனும் மூளை கட்டிகள் இருந்து வருகின்றனவா என்பதனை பரிசோதனை செய்வதற்கு மருத்துவர்கள் PET ஸ்கான் கருவிகளை பயன்படுத்தி வருகின்றார்கள்.

மருத்துவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புற்றுநோயை கண்டறிவதற்கும், புற்றுநோய்க்கான சிகிச்சையின் தாக்கங்களை அளவிடுவதற்கும் PET பரிசோதனை கருவியை பயன்படுத்துகின்றார்கள். புற்றுநோயின் செயற்பாட்டை கண்டறிந்து கொள்ளும் விடயத்தில் PET ஸ்கான் சோதனை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றது. ஏனெனில், உயர் வேகத்தில் வளர்ச்சியடையும் கெடுதி விளைவிக்கும் செல்கள், சாதாரண செல்களிலும் பார்க்க அதிகளவில் சர்க்கரையை உருவாக்குகின்றன. இது ஒரு கட்டி எந்தளவுக்கு தீவிரமானதாக இருந்து வருகின்றது அல்லது சிகிச்சையின் மூலம் அதன் வளர்ச்சி எந்த அளவுக்கு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்த ஒரு பார்வையை உங்கள் மருத்துவருக்கு வழங்க முடியும்.

  • MRI சோதனை
  • MRI என்றால் என்ன?

    (காந்த எதிரொலி வரைபடங்களை உருவாக்கும்) ஒரு MRI ஸ்கான் கருவி உங்கள் உடலின் உள்ளக உறுப்புக்கள் மற்றும் கட்டமைப்புக்கள் என்பன குறித்த மிகவும் விரிவான, பல்வேறு வெட்டுமுகத் தோற்றங்களைக் காட்டும் ஒரு படத்தை உருவாக்குவதற்கென பாரிய காந்தம், ரேடியோ அலைகள் மற்றும் கணணி என்பவற்றை பயன்டுத்துகின்றது.

    உங்கள் நோயை நிர்ணயம் செய்து கொள்வதற்கு அல்லது சிகிச்சைக்கு நீங்கள் எந்த அளவில் எதிர்வினையாற்றி உள்ளீர்கள் என்பதனை கண்டறிந்து கொள்வதற்கு உங்கள் மருத்துவர் இதனைப் பயன்படுத்த முடியும். ஒரு MRI ஸ்கான் கருவி CT ஸ்கான் கருவிகள் மற்றும் எக்ஸ்ரேக்கள் என்பவற்றிலிருந்து வேறுபடுகின்றது. ஏனெனில், அது தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர் வீச்சுக்களை பயன்படுத்துவதில்லை.

    MRI சோதனைக் கருவி எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?

    உடலின் எலும்பு சாராத பாகங்கள் அல்லது இழையங்கள் என்பவற்றின் படங்களை எடுப்பதற்கு MRI ஸ்கானர் கருவிகள் குறிப்பாக நன்கு பொருத்தமானவையாக இருந்து வருகின்றன. அவை கணினி மூலமாக மேற்கொள்ளப்படும் Tomography சோதனையிலிருந்து வேறுபட்டவையாகும். இந்தச் சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர் வீச்சு x- கதிர்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை. மூளை, முதுகுத் தண்டு, நரம்புகள் மற்றும் அதே போல தசைகள் என்பவற்றை சாதாரண எக்ஸ்ரே மற்றும் CT சோதனைகளிலும் பார்க்க MRI சோதனைக்கு ஊடாக மிகத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது. இந்தக் காரணத்தினால் முழங்கால் மற்றும் தோள் பட்டை காயங்கள் குறித்த படங்களை எடுப்பதற்கு MRI கருவி பெருமளவுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

    மூளையை பொறுத்தவரையில் MRI கருவி வௌளை நிற வஸ்து மற்றும் சாம்பல் நிற வஸ்து என்பவற்றுக்கு இடையில் வேறுபாட்டை எடுத்துக் காட்ட முடியும். மேலும், இரத்த நாள வீக்கங்கள் மற்றும் கட்டிகள் என்பவற்றை நிர்ணயம் செய்து கொள்வதற்கும் அதனைப் பயன்படுத்த முடியும். MRI கருவி எக்ஸ்ரேக்களை அல்லது ஏனைய கதிர்வீச்சுக்களை பயன்படுத்தாத காரணத்தினால் நோய் நிர்ணயத்துக்கென அல்லது சிகிச்சைக்கென அடிக்கடி படங்கள் எடுக்க வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் இந்த முறை விருப்பப்படுகின்றது. குறிப்பாக, மூளையில் படங்களை எடுக்கும் பொழுது இது அதிகமாக விரும்பப்படும் ஒரு முறையாக உள்ளது. எவ்வாறிருப்பினும், எக்ஸ்ரே படங்கள் எடுத்தல் மற்றும் CT ஸ்கான் என்பவற்றிலும் பார்க்க, MRI சோதனை செலவு கூடியதாக இருந்து வருகின்றது.

  • CT ஸ்கான் சோதனைகள்
  • CT ஸ்கான் சோதனை என்றால் என்ன?

    கணினி மூலம் மேற்கொள்ளப்படும் (CT அல்லது CT) பரிசோதனை, உங்கள் உடல் உறுப்புக்கள் மற்றும் ஏனைய இழையங்கள் என்பன குறித்த வெட்டுமுக தோற்றங்களைக் காட்டும் படங்களை உருவாக்குவதற்கென கணினிகள் மற்றும் சுழலும் எக்ஸ்ரே இயந்திரங்கள் என்பவற்றை பயன்படுத்துகின்றது. பாணின் ஒரு துண்டைப் போல இந்த இரு பரிமாண (2D) ஸ்கான் சோதனை உங்கள் உடலுக்குள் இருக்கும் ஒரு துண்டத்தை (slice) காட்டுகின்றது. அது சாதாரண எக்ஸ்ரேயிலும் பார்க்க மிகவும் விரிவான விதத்தில் அதனைக் காட்டுவதுடன், புற்று நோய் போன்ற நிலைமைகளை கண்டறிந்து கொள்வதற்கு மருத்துவர்களுக்கு இடமளிக்கின்றது.

    ஒரு கட்டி, இரத்தக் கட்டி அல்லது தொற்று என்பன எங்கிருக்கின்றது என்பதனை கண்டறிந்து கொள்வதற்கு அவை உதவுவதுடன், சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் உடல் திசு சோதனைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் போன்ற நடைமுறைகளுக்கும் வழிகாட்டுகின்றன.

    தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிகிச்சைகளின் வினைத்திறனை மதிப்பிட்டுக் கொள்வதற்கென மருத்துவர்கள் CT பரிசோதனைகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

  • டிஜிற்றல் எக்ஸ்ரே பரிசோதனை
  • டிஜிற்றல் கதிர் வீச்சு பரிசோதனை / எக்ஸ்ரே பரிசோதனை எக்ஸ்ரே படம் எடுக்கும் ஒரு முறையாகும். இதன் போது பாரம்பரிய புகைப்பட படச்சுருளுக்குப் பதிலாக டிஜிற்றல் உணரிகள் (Sensors) பயன்டுத்தப்படுகின்றன. இது படங்களை டிஜிற்றல் முறைக்கு ஊடாக மிக வேகமாக, எளிதாக இடமாற்றம் செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது. மேலும், பாரம்பரிய எக்ஸ்ரே பரிசோதனைகள் பாதுகாப்பானவையாக கருதப்பட்டு வரும் அதே வேளையில், டிஜிற்றல் எக்ஸ்ரே பரிசோதனைகள் 80% குறைவான கதிர்வீச்சினை உருவாக்குகின்றன. இதன் பொருள் டிஜிற்றல் எக்ஸ்ரே பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொழுது நோயாளி குறைந்தளவிலான கதிர் வீச்சை எதிர்கொள்கிறார் என்பதாகும்.

  • மார்பகப் பரிசோதனை (Mammography)
  • மேமோகிராபி என்பது மார்பகம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஒரு எக்ஸ்ரே பரிசோதனை ஆகும். மார்பகத்தில் கட்டி, வலி அல்லது மார்பு காம்புக்கு ஊடாக கசிவுகள் என்பவற்றைக் கொண்டிருக்கும் பெண்கள், அதே போல மார்பகம் தொடர்பாக முறைப்பாடுகளை கொண்டிராத பெண்கள் ஆகியோருக்கு மத்தியில் நிலவி வரும் மார்பகப் புற்றுநோயை கண்டறிவதற்கும், நிர்ணயம் செய்வதற்கும் அது பயன்படுத்தப்படுகின்றது. நோய் குறித்த எத்தகைய அறிகுறிகளையோ, நோய்க் குறிகளையோ கொண்டிராத பெண்களுக்கு மத்தியில் மார்பகப் புற்றுநோய் தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் இதனை பயன்படுத்த முடியும்.

    இந்த நடைமுறை மார்பகப் புற்றுநோய்கள், தீங்கு விளைவிக்கக்கூடிய கட்டிகள் மற்றும் திசுக்களின் திரள் என்பவற்றை தொடுதலின் மூலம் கண்டறிவதற்கு முன்னர் அவற்றை கண்டுகொள்வதற்கு உதவுகின்றது.

  • அதிவேக ஒலி அலைகள் (Ultra Sound) மூலம் ஸ்கான் பரிசோதனை (Sonogram)
  • அதிவேக ஒலி அலைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிசோதனை உடலின் உள்பாகம் குறித்த படங்களை உருவாக்குவதற்கென ஒலி அலைகளை பயன்படுத்துகின்றது. ஒலி அலை பரிசோதனைகள் பாதுகாப்பானவையாகும். ஏனெனில், ஒரு வரைபடத்தை உருவாக்குவதற்கென ஒலி அலைகளை அல்லது எதிரொலிகளை அவை பயன்படுத்துகின்றன. ஒலி அலைப் பரிசோதனை பாதுகாப்பானதாக இருந்து வருவதுடன், அது கதிர் இயக்கத்தை பயன்படுத்துவதில்லை.

    இந்தப் பரிசோதனைகள் கர்ப்ப காலத்தின் போது கரு வளர்ச்சியை மதிப்பிட்டுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படுவதுடன், அது ஈரல், இதயம், சிறுநீரகம், அல்லது அடி வயிறு என்பவற்றில் இருக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து கொள்வதற்கும் உதவுகின்றது. மேலும், குறிப்பிட்ட சில வகைளைச் சேர்ந்த திசு சோதனைகளுக்கும் அவை உதவுகின்றன

சிகிச்சை

புற்றுநோய்க்கு மருந்துகள் மூலமான சிகிச்சை (Medical Oncology)

கீமோதெரபி சிகிச்சை, இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சை, நோய் எதிர்ப்புச் சக்தி சிகிச்சை மற்றும் ஹோர்மோன் சிகிச்சை என்பவற்றின் மீது இது கவனம் செலுத்துகின்றது.

புற்றுநோய்க்கு அறுவை மருத்துவ சிகிச்சை (Surgical Oncology)

அறுவை மருத்துவ முறை, புற்றுநோயை நிர்ணயித்துக் கொள்வதற்கும், அதன் கட்டத்தை அறிந்து கொள்வதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் அறுவை சிகிச்சையை பயன்படுத்துகின்றது. புற்று நோயியல் அறுவை மருத்துவர்கள் வலியை கட்டுப்படுத்துவதற்கும், நோயாளி ஒருவரின் சௌகரிய மட்டத்தை உயர்த்துவதற்கும், புற்றுநோய்களுடன் சம்பந்தப்பட்ட நோய்க் குறிகள் மற்றும் பக்க விளைவுகள் என்பவற்றை சமாளிப்பதற்கும் ஏனைய அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ள முடியும்

நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்ற விடயம் கட்டியின் வகை மற்றும் அளவு, அமைவிடம் மற்றும் தரம், அதன் வளர்ச்சிக் கட்டம் என்பவற்றுடனும், நோயாளியின் வயது, உடல் பொருத்தப்பாடு மற்றும் ஏனைய மருத்துவ நிலைமைகள் என்பவற்றை உள்ளடக்கிய நோயாளியின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

பல நோயாளர்கள் கீமோதெரபி சிகிச்சை, கதிர் வீச்சு சிகிச்சை மற்றும் / அல்லது ஹோர்மோன் சிகிச்சை போன்ற ஏனைய சிகிச்சைகளுடன் இணைந்த விதத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும். புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பதற்கு அல்லது மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைக்கு முன்னர் அல்லது பின்னர் அறுவை சிகிச்சை சாராத சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட முடியும்.

புற்று நோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை.

இது கதிர்வீச்சு மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் விடயத்தில் கவனம் செலுத்துகின்றது.

கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Oncology) என்றால் என்ன?

அண்மைக் காலத்தில் மருத்துவ தொழில்நுட்பம் மிகவும் பிரமாண்டமான அளவில் விருத்தியடைந்து வந்துள்ளது. குறிப்பாக புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையில் கணிசமான அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கதிர்வீச்சு சிகிச்சையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சிகரமான மாற்றங்களை எடுத்து வந்திருப்பதுடன், இது நோயாளர்களுக்கு மிகச் சிறந்த சிகிச்சைகளை வழங்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் கதிர்வீச்சு மருத்துவர் (Radiation Oncologist) என அழைக்கப்படும் ஒரு விசேட மருத்துவர் ஒவ்வொரு நோயாளியினதும் கதிர்வீச்சு சிகிச்சையை முகாமைத்துவம் செய்து, மேற்பார்வை செய்கின்றார். உங்களுக்கு புற்றுநோய் இருப்பதாக நோய் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பின், உங்கள் புற்றுநோய் சிகிச்சையின் ஒரு பாகமாக கதிர்வீச்சு சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் தெரிவை நீங்கள் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை பொருத்தமானதா என்ற விடயத்தை உங்கள் மருத்துவர் நிர்ணயிப்பார்.

கதிர்வீச்சு சிகிச்சை என்றால் என்ன?

ஒரு சில சந்தர்ப்பங்களில் ரேடியோதெரபி (Radio Therapy) என அழைக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை உடல் கட்டிகளை அழிப்பதற்கும், புற்றுநோய் செல்களை அழிப்பதற்கும் உயர் வலு கதிர் இயக்கத்தை பயன்படுத்தும் ஒரு வகை புற்றுநோய் சிகிச்சை ஆகும். அது குறிப்பிட்ட உடல் உறுப்புக்கு மட்டும் வழங்கப்படும் ஒரு சிகிச்சையாக இருந்து வருகின்றது. அதன் பொருள் சூழவுள்ள ஆரோக்கியமான இழையங்களை விட்டுவிட்டு, அது கட்டியை மட்டுமே இலக்காகக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றது என்பதாகும்.

நோயாளர்களுக்கு இரு வழிகளில் கதிர்வீச்சு சிகிச்சையை வழங்க முடியும்:

  1. வெளி ஒளிக்கற்றை சிகிச்சை (External Beam Radiation)
  2. வெளி ஒளிக்கற்றை சிகிச்சை Linear Accelerator என அழைக்கப்படும் ஒரு பெரிய இயந்திரத்தின் பாவனைக்கு ஊடாக கதிர்வீச்சை வழங்குகின்றது. இந்த இயந்திரம் உடலின் வெளிப்பாகத்திலிருந்து புற்றுநோயை துல்லியமாக இனங்கண்டு, ஒளிக்கற்றைகளை அனுப்பி வைக்கின்றது.

  3. Brachytherapy அல்லது உள்ளக கதிர்வீச்சு சிகிச்சை
  4. Brachytherapy சிகிச்சை விதைகள் என அழைக்கப்படும் ரேடியோ துகள்களை உடலுக்குள் கட்டியின் மீது அல்லது புற்றுநோய் செல்களுக்கு அருகில் வைக்கும் ஒரு கதிர்வீச்சு சிகிச்சை முறையாகும்.

*அனைத்து புற்றுநோயாளர்களிலும் சுமார் அரைவாசிப் பேர் தமது புற்றுநோய் பராமரிப்பின் ஏதேனும் ஒரு கட்டத்தின் போது ஏதேனும் ஒரு வகையிலான கதிர்வீச்சு சிகிச்சையை பெற்றுக்கொள்கின்றார்கள்.

கதிர்வீச்சு சிகிச்சைத் தெரிவுகள்
முப்பரிமாண கதிர்வீச்சு சிகிச்சை (3D-CRT) 3
மேலும் வாசிக்க
TrueBeam™ STx System
மேலும் வாசிக்க
Intensity Modulated Radiation Therapy (IMRT)
மேலும் வாசிக்க
Image Guided Radiation Therapy (IGRT)
மேலும் வாசிக்க
Rapid Arc
மேலும் வாசிக்க
Electron Beam Therapy
மேலும் வாசிக்க
Brachytherapy
மேலும் வாசிக்க
Stereotactic Body Radiation Therapy (SBRT)
மேலும் வாசிக்க
Stereotactic Radiosurgery (SRS)
மேலும் வாசிக்க
ரேடியோ கதிர் சிகிச்சை : ஒரு பார்வை

ரேடியோ கதிர் சிகிச்சையில் ஆறு அடிப்படை படிமுறைகள் இருந்து வருகின்றன. அவை ஒவ்வொன்றும் அதன் மூலம் எதனை எதிர்பார்க்க முடியும் என்பது குறித்த விளக்கத்தை நோயாளர்களுக்கு வழங்குகின்றது.

கதிர்வீச்சு சிகிச்சை செயன்முறையின் முதலாவது படிமுறை மருத்துவ ஆலோசனையாகும். புற்று நோயியல் மருத்துவர் (Oncologist) ஒருவருடன் சந்திப்பை ஏற்பாடு செய்வதுடன் இது ஆரம்பமாகின்றது. அந்த மருத்துவர் நோயாளியின் மருத்துவப் பதிவுகளையும், வியாதி விவர அறிக்கையையும் மற்றும் ரேடியோ கதிர் படங்கள் என்பவற்றையும் மீளாய்வு செய்து, உடல் பரிசோதனை ஒன்றை மேற்கொள்கின்றார். இந்த மீளாய்வை அடிப்படையாகக் கொண்டு ரேடியோ கதிர் சிகிச்சை முறை தெரிவு செய்யப்பட்டால் ஒத்திகை பார்ப்பதற்கென ஒரு திகதி வழங்கப்படும்.

வலி நிவாரண பராமரிப்பு

ஆசிரி மருத்துவமனையில் தேவையுள்ள நோயாளர்களுக்கு மிகச் சிறந்த வலி நிவாரணப் பராமரிப்பை வழங்க வேண்டும் என்பதே எமது உறுதியான நம்பிக்கையாகும். பன்முகத் துறைகளைச் சேர்ந்த தொழில்வாண்மையாளர்களின் ஒரு குழுவின் ஊடாக இது வழங்கப்படுகின்றது. அவர்களுடைய முதன்மைப் பொறுப்பு வருமாறு:

  • சுற்றாடல், வீட்டு சுற்றாடலை ஒத்ததாகவும், சௌகரியம் மிக்கதாகவும் இருந்து வருதனை உறுதிப்படுத்துதல். அதே வேளையில், வழமையான ஆஸ்பத்திரி சூழலிலும் பார்க்க அதி நவீன மருத்துவ வசதிகளை வழங்குதல்.
  • வலி மற்றும் நோயாளிக்கு தொந்தரவளிக்கும் ஏனைய நோய்க் குறிகள் என்பவற்றிலிருந்து நிவாரணம் அளித்தல்.
  • வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துல்; மரணித்தலை ஒரு சாதாரண செயன்முறையாக கருதுதல்.
  • மரணத்தை அவசரப்படுத்துவதோ அல்லது ஒத்திப் போடுவதோ இல்லை.
  • நோயாளர் பராமரிப்பில் உளவியல் மற்றும் ஆன்மீக அம்சங்களை உள்வாங்குதல்.
  • மரணம் வரையில் எவ்வளவு சுறுசுறுப்பாக முடியுமோ அவ்வளவு சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான ஆதரவை நோயாளிக்கு வழங்குதல்.
  • நோயாளியின் நோயுடன் சமாளித்து வாழ்வதற்கும், அவர்களுடைய இழப்புத் துயரத்தை சமாளிப்பதற்கும் குடும்பத்திற்கு உதவுதல். தேவை ஏற்பட்டால் மரணத்தின் பின்னர் துக்கம் அனுஷ்டிப்பது தொடர்பான கலந்தாலோசனையும் இதில் வழங்கப்படும்.
  • வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்; மேலும் நோய் கட்டத்தின் போது சாதகமான விதத்தில் செல்வாக்குச் செலுத்துதல்.